செய்திகள்

அரசாணை நகலை எரித்து 8 வழிச்சாலைக்கு எதிராக போராடிய 63 பேர் ஜெயிலில் அடைப்பு

Published On 2018-07-07 10:35 GMT   |   Update On 2018-07-07 10:35 GMT
சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்க்கான நகலை எரித்து போராடிய 63 பேர் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #greenwayroad
சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர்அலுவலகம் அருகே சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் அரசாணை நகலை எரிக்கும் போராட்டம் நேற்று நடந்தது.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைதான பெண் ஒருவரை மட்டும் போலீசார் விடுவித்தனர். மற்ற 44 பேரை போலீசார் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #greenwayroad
Tags:    

Similar News