செய்திகள்

சரத்குமார் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 14-ந் தேதி ரத்ததான முகாம்

Published On 2018-07-04 23:01 GMT   |   Update On 2018-07-04 23:01 GMT
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருக்கிறோம். எனவே கட்சி நிர்வாகிகள் வருகிற 14-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக தங்கள் பகுதிகளிலுள்ள தன்னார்வலர்களுடனோ, என்.ஜி.ஓ. நிறுவனங்களுடனோ, தனியார் மற்றும் பொது நிறுவனங்களுடனோ இணைந்து ரத்ததான முகாம் நடத்த வேண்டும்.

இதுவரை தமிழகத்தில் நடந்திடாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே தலைவர் ஆர்.சரத்குமாரின் எண்ணம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News