செய்திகள்

காஞ்சீபுரம் அருகே வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு - 3 பேர் கைது

Published On 2018-07-03 06:02 GMT   |   Update On 2018-07-03 06:02 GMT
காஞ்சீபுரம் அருகே வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த பெருநகர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஸ்ரீதர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து தாக்கி செல்போனை பறித்தனர்.

இது பற்றி அவர் கிராம மக்களிடம் தெரிவித்தார். திரண்டு வந்தபொதுமக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை பெருநகர் போலீசில் ஒப்படைத்தனர். 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News