செய்திகள்

சீர்காழி தாசில்தாரை மிரட்டிய வாலிபர் கைது

Published On 2018-07-02 16:07 IST   |   Update On 2018-07-02 16:07:00 IST
சீர்காழி தாசில்தாரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.

சீர்காழி:

சீர்காழி தாசில்தாராக இருந்து வருபவர் பாலமுருகன். இவர் நேற்று இரவு வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள மேலகொண்டத்தூர் மண்ணியாற்று பகுதியில் ரோந்து சென்றார்.

அப்போது அங்கு நின்ற ஒலையாம்புத்தூர் பகுதியை சேர்ந்த வரதராஜன் (30) மற்றும் அவரது நண்பர் ஆகியோர் , தாசில்தார் பாலமுருகனிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாசில்தார் பாலமுருகன், இந்த சம்பவம் பற்றி வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாசில்தாரை மிரட்டிய வரதராஜனை கைது செய்தனர். அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News