செய்திகள்
பசுமை வழிச்சாலைக்கு மரங்கள் வெட்ட எதிர்ப்பு: மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இதற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #chennaisalem8wayroad
சென்னை:
சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. எனவே, பசுமை வழிச்சாலைக்கு மரங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
நிலம் கையகப்படுத்தற்கு முன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். காடுகளை அழித்து தார் சாலை அமைத்தால் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுப்பிரமணியம் ஆகியோர் இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஜூலை 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #chennaisalem8wayroad