செய்திகள்

மாணவர்கள் சொந்த மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

Published On 2018-06-22 11:03 GMT   |   Update On 2018-06-22 11:03 GMT
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், வரும் ஆண்டு முதல் ஒரு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். #NEET #HRDMinister #PrakashJavadekar

சென்னை:

சென்னை ஐஐடியில் இன்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வரும் ஆண்டு முதல் ஒரு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

வரும் ஆண்டு முதல் ஒரு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். தேசிய கல்வி கொள்கை விரைவில் கொண்டு வரப்படும். மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும். தமிழில் கேள்வித்தாள்களை தயாரிக்க நல்ல தமிழ் மொழி பெயர்ப்பார்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். #NEET #HRDMinister #PrakashJavadekar
Tags:    

Similar News