செய்திகள்

யோகா-இயற்கை மருத்துவ பிரிவில் 73 டாக்டர்கள் விரைவில் நியமனம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2018-06-21 08:21 GMT   |   Update On 2018-06-21 08:21 GMT
அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #InternationalYogaDay2018
சென்னை:

சர்வதேச யோகா தினத்தை யொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

யோகா என்பது உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் அறிவியல் பூர்வ கலையாகும்.

மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதட்டம் போன்றவற்றை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.


தமிழகத்தில் 31 அரசு வட்ட மருத்துவமனையிலும் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் மூலம் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் இவ்வசதிகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #InternationalYogaDay2018
Tags:    

Similar News