செய்திகள்
திருப்பூரில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
திருப்பூர் மாவட்டத்தில் மதிப்பெண் குறைந்த வருத்தத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்கா பாளையம் புது அரி ஜன காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் காயத்ரி (16). இவர் தாராபுரம் சர்ச் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவருக்கு கண்ணில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் பிளஸ்-1 தேர்வில் 450 மதிப்பெண்களே பெற முடிந்தது.
இதனை தொடர்நது மாணவி காயத்ரி வேதனையில் இருந்து வந்தார் நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை வீடு திரும்பிய காயத்ரியின் தாய்-தந்தை ஆகியோர் மகள் தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்கா பாளையம் புது அரி ஜன காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் காயத்ரி (16). இவர் தாராபுரம் சர்ச் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவருக்கு கண்ணில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் பிளஸ்-1 தேர்வில் 450 மதிப்பெண்களே பெற முடிந்தது.
இதனை தொடர்நது மாணவி காயத்ரி வேதனையில் இருந்து வந்தார் நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை வீடு திரும்பிய காயத்ரியின் தாய்-தந்தை ஆகியோர் மகள் தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.