செய்திகள்

மங்கலத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2018-06-17 14:15 GMT   |   Update On 2018-06-17 14:15 GMT
மங்கலத்தில் புதுப்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 25). இவரது மனைவி சங்கீதா (22). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில், கணவர் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

கணவர் குடும்பத்தினர் அவரை மீட்டு திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச் சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி புதுப்பெண் சங்கீதா பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News