செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-06-14 17:48 GMT   |   Update On 2018-06-14 17:48 GMT
அஞ்சுகிராமம் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் மிக்கேல் அந்தோணி சேவியர் (வயது 44). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை மிக்கேல் அந்தோணி சேவியர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

பின்னர், திருவிழா முடிந்து இரவு வீடு திரும்பினார்கள். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.26 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மிக்கேல் அந்தோணி சேவியர் குடும்பத்தினருடன் திருவிழாவுக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மிக்கேல் அந்தோணிசேவியர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார். 
Tags:    

Similar News