செய்திகள்
காசோலை மோசடி வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
திருத்துறைப்பூண்டியில் காசோலை மோசடி வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோப்படி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரிடம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியை சேர்ந்த ஹாஜாமைதீன் (வயது35) என்பவர் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக ஹாஜாமைதீன் வழங்கிய காசோலையை செல்வராஜ், ஒரு வங்கியில் செலுத்தினார். அப்போது ஹாஜாமைதீனின் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து செல்வராஜ், ஹாஜாமைதீன் மீது திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு நீதிபதி கண்ணன், ஹாஜாமைதீனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோப்படி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரிடம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியை சேர்ந்த ஹாஜாமைதீன் (வயது35) என்பவர் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக ஹாஜாமைதீன் வழங்கிய காசோலையை செல்வராஜ், ஒரு வங்கியில் செலுத்தினார். அப்போது ஹாஜாமைதீனின் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து செல்வராஜ், ஹாஜாமைதீன் மீது திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு நீதிபதி கண்ணன், ஹாஜாமைதீனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.