செய்திகள்
தேனி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
தேனி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள கோவிந்தநகரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் இளைய ஆழ்வார். இவரது மனைவி பத்மாவதி. இவர் அதே பகுதியில் பால்பூத் வைத்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலை பால்பூத்தை திறப்பதற்காக பத்மாவதி நடந்து சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் பத்மாவதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.