செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-06-12 11:43 GMT   |   Update On 2018-06-12 11:43 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருவெண்ணைநல்லூர்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தி.கொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 19).

இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த ரமேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் ரமேசுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த ரமேஷ் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. #Tamilnews

Tags:    

Similar News