செய்திகள்
அம்மாபேட்டைக்கு நாளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வருகை
தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.
அம்மாபேட்டை:
ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சி தானந்தம் தலைமை தாங்குகிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் வருகின்ற தேர்தலுக்கு கட்சியினரை தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார்.
இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணை தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, வடக்கு மாவட்ட துணை தலைவர் எ.சே துவெங்கட்ராமன் வடக்கு மாவட்ட பொருப்பாளர் மோகன்கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த தகவலை ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் தெரிவித்து உள்ளார். #Tamilnews
ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சி தானந்தம் தலைமை தாங்குகிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் வருகின்ற தேர்தலுக்கு கட்சியினரை தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார்.
இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணை தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, வடக்கு மாவட்ட துணை தலைவர் எ.சே துவெங்கட்ராமன் வடக்கு மாவட்ட பொருப்பாளர் மோகன்கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த தகவலை ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் தெரிவித்து உள்ளார். #Tamilnews