செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி முறை திருத்தி அமைக்கப்படும் - ப.சிதம்பரம்

Published On 2018-06-09 18:31 GMT   |   Update On 2018-06-09 18:31 GMT
காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், அடுத்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. முறையை திருத்தி அமைப்போம் என தெரிவித்தார். #Congress #PChidambaram #GST
காரைக்குடி:

காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மத சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர்.

இந்தி திணிப்புக்கும், இந்துத்துவாவுக்கும் தமிழகத்தில் இடமில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமேயானால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். #Congress #PChidambaram #GST
Tags:    

Similar News