செய்திகள்

கள்ளநோட்டு கும்பலை பிடித்த போலீசாருக்கு கமி‌ஷனர் பாராட்டு

Published On 2018-06-02 09:55 GMT   |   Update On 2018-06-02 09:55 GMT
கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட இருந்த கும்பலை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த குற்றப்பிரிவு போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாராட்டியுள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் நேற்று மாலை தடாகம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வேலாண்டிப் பாளையத்தை சேர்ந்த ஆனந்த்(35) என்பவர் பாக்கெட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 4 இருந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை மாநகர துணை கமி‌ஷனர்(தலைமையிடம்) தர்மராஜன் நேரடி மேற்பார்வையில் குற்றப்பிரிவு உதவி ஆணையாளர்கள் சோமசேகர், சோமசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வேலாண்டிப்பாளையம் மருதப்பகோனார் வீதியில் வெங்கிடசாமி என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தினர்.

அங்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் 5904 இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரமாகும். அவர்களிடமிருந்து கலர் ஜெராக்ஸ் மிஷின், ஹார்டுடிஸ்க், கம்ப்யூட்டர் மானிட்டர், கீபோர்டு, கட்டிங் மெஷின், ஒரு செல்போன், இரு சக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் கடையை மாதம் ரூ.2,700-க்கு வாடகைக்கு எடுத்து இங்கு கள்ளநோட்டு அச்சடித்து கோவை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் மூலமாகவும், தெரிந்த நபர்கள் மூலமாகவும் கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்தது தெரியவந்தது.

பண மதிப்பு இழப்புக்கு பின் வந்த புதிய கரன்சிநோட்டில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட இருந்த கும்பலை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த குற்றப்பிரிவு போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா பாராட்டினார். #tamilnews
Tags:    

Similar News