செய்திகள்
திண்டிவனத்தை சேர்ந்த சாராய வியாபாரி தடுப்புக்காவல் சட்டத்தில் கைது
திண்டிவனத்தை சேர்ந்த சாராய வியாபாரியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் மயிலம் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 35). சாராய வியாபாரியான இவர் மீது சாராயம் விற்பனை செய்தல், கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த மாதம் மயிலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக பிரேம்நாத்தை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் சாராய வியாபாரி பிரேம்நாத்தை மயிலம் போலீசார் நேற்று தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். #Tamilnews
திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 35). சாராய வியாபாரியான இவர் மீது சாராயம் விற்பனை செய்தல், கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த மாதம் மயிலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக பிரேம்நாத்தை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் சாராய வியாபாரி பிரேம்நாத்தை மயிலம் போலீசார் நேற்று தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். #Tamilnews