செய்திகள்

வேப்பூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலி

Published On 2018-05-31 20:19 IST   |   Update On 2018-05-31 20:19:00 IST
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வேப்பூர்:

வேப்பூர் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 50) விவசாயி. இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் சென்றார். பின்னர் அங்கு வேலை யை முடித்துவிட்டு அங்கிருந்து விளம்பாவூருக்கு அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

பெரியநசலூர் பஸ் நிறுத்தம் அருகே சேலம்-விருத்தாசலம் சாலையில் வந்தபோது பின்னால் வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கிவீசப்பட்ட ராஜவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News