செய்திகள்
விக்னேஷ்

பாலக்கோடு அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவன் தற்கொலை

Published On 2018-05-29 10:37 IST   |   Update On 2018-05-29 10:37:00 IST
பாலக்கோடு அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெரிய கம்மாலப்பட்டியை சேர்ந்த பூபதி. இவரது மகன் விக்னேஷ் (வயது 16). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிவுக்காக காத்திருந்த விக்னேஷ் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News