செய்திகள்

திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பேரணி

Published On 2018-05-28 18:21 IST   |   Update On 2018-05-28 18:21:00 IST
திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மே தின பேரணி நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவாடானை பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக பேரணி வந்தது. அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து பலரும் பேசினர்.

இந்த பேரணி பொதுக்கூட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News