செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் பயணிகளை இறக்கிவிட்டு அரசுப் பேருந்துக்கு மர்மநபர்கள் தீ வைப்பு

Published On 2018-05-27 14:31 GMT   |   Update On 2018-05-27 14:31 GMT
புதுச்சேரியில் இருந்து கனகசெட்டிக்குளம் பகுதியில் இன்று வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்தில் பயணித்தவர்களை கீழே இறக்கிவிட்டு மர்மநபர்கள் பேருந்துக்கு தீ வைத்துள்ளனர்.
புதுச்சேரி:

பாமக மூத்த தலைவர் காடுவெட்டி குரு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனை அடுத்து, வட கிழக்கு மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இந்நிலையில், இன்று புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து மீது மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.

கனகசெட்டிக்குளம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பின்னர் அந்நபர்கள் தீ வைத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் வேகமாக தீயை அணைத்தனர். இது தொடர்பாக காலட்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News