செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை - பதர்சயீத் - பொன்மாணிக்கவேல் ஆஜர்

Published On 2018-05-25 08:50 GMT   |   Update On 2018-05-25 08:50 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதர்சயீத் மற்றும் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆஜர் ஆனார்கள். #JayalalithaDeath

சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர்சயீத், போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆகியோர் இன்று விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.


அதை தொடர்ந்து இன்று 2 பேரும் விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராகினர். பதர்சயீத் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ. ஆக இருந்தார். இவர் ஜெயலலிதாவின் பள்ளி பருவ தோழி ஆவார்.

எனவே அவரது உடல் நலம் குறித்த தகவல்களை விசாரணை கமி‌ஷன் முன் வழங்கினார்.

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது கடந்த 2011-ம் ஆண்டில் பொன் மாணிக்கவேல் உளவுப்பிரிவு டி.ஐ.ஜி. ஆக இருந்தார். அவரிடமும் ஜெயலலிதா உடல் நலம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்தார். #JayalalithaDeath

Tags:    

Similar News