செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா: அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு

Published On 2018-05-23 13:29 GMT   |   Update On 2018-05-23 13:29 GMT
தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

சுவாமிமலை:

தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் திருபுவனம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் கடைவீதியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நகர செயலாளரும், திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவருமான சிங் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை எம்.பி ஆர்.கே.பாரதிமோகன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய தலைவருமான ஏ.வி.கே.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான இரா.துரைக்கண்ணு கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு, நீர் மோர், தர்பூசணி, இளநீர், ரஸ்னா, பலாப்பழம் வழங்கினார்.

இந்த விழாவில் திருபுவனம் நகர துணைச்செயலாளர் எல்.எஸ்.ஜோதி, தலைமை கழக பேச்சாளர் கோகி.பாஸ்கர், திருபுவனம் வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தலைவர் முத்துக்குமார், திருவள்ளுவர் பட்டுக்கூட்டுறவு சங்க தலைவர் ஜி.பன்னீர்செல்வம், மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் வரலெட்சுமி, நகர பேரவை இணைச்செயலாளர் ஜி.மயில்வேல், ஆட்டோசங்கர், தியாகராஜன், நகர பாசறை செயலாளர் ராஜன், ராஜசேகரன், வெங்கடேஷ், தேவசகாயம், ஆனந்தன், ஜெயராமன், பழவண்டி நாகராஜன், குமரேசன், சிங் ரமேஷ் மற்றும் திருபுவனம் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News