செய்திகள்
திருச்சி விமான நிலைய மோதல் வழக்கில் சீமானை கைது செய்ய ஐகோர்ட் கிளை தடை
திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர்கள் கட்சியினர் மோதிய விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி சீமான் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வரும் 30-ம் தேதி வரை அவரை கைது செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. #Seeman
மதுரை:
கடந்த வாரம் திருச்சி விமான நிலையத்தில் வைகோ மற்றும் சீமான் வருகைக்காக காத்திருந்த மதிமுக, நாம் தமிழர்கள் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில், பிரச்சனையை தூண்டி விட்டதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை அடுத்து, அவர் முன் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, மே 30 வரை சீமானை கைது செய்ய போலீசாருக்கு தடை விதித்தனர். மேலும், தொண்டர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமான பேசக்கூடாது என சீமானுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். #Seeman