செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2018-05-22 20:40 GMT   |   Update On 2018-05-22 20:40 GMT
சென்னை-திருவள்ளூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை-திருவள்ளூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(புதன்கிழமை) முதல் 26-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஆவடியில் இருந்து அதிகாலை 2.50 மணிக்கு பட்டாபிராம் ராணுவ சைடிங் நோக்கி புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* பட்டாபிராம் ராணுவ சைடிங்கில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கி புறப்படும் மின்சார ரெயில் பட்டாபிராம் ராணுவ சைடிங்-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News