செய்திகள்
சிவகங்கை அருகே மினி லாரி-மொபட் மோதல் - பெண் படுகாயம்
சிவகங்கை அருகே மினி லாரி-மொபட் மோதல் - பெண் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
மதுரை மாவட்டம் தேவன்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி சித்ரா தேவி (வயது30). இவர் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
இன்று அதிகாலை சித்ராதேவி மொபட்டில் வெளியே புறப்பட்டார். மலம்பட்டி-கீழப்பூங்குடி ரோட்டில் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சித்ராதேவி படுகாயம் அடைந்தார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து மினி லாரியை ஓட்டி வந்த திருப்பத்தூர் திருமணப்பட்டியை சேர்ந்த கார்த்திகைசாமி என்பவரை கைது செய்தார்.