செய்திகள்
கோவை விமான நிலையத்தில் கஞ்சா கடத்த முயன்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது
கோவையில் இருந்து சார்ஜாவுக்கு விமானத்தில் கஞ்சா கடத்த முயன்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவையில் இருந்து வளைகுடா நாடான சார்ஜாவுக்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று அதிகாலை 3 மணிக்கு சார்ஜாவுக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது.
பயணிகள் விமானத்தில் ஏற காத்து இருந்தனர். விமானம் ஏற வந்த வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் ஒரு பையில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது அவர் சூடான் நாட்டை சேர்ந்த முகம்மது தாரிக் சாலிக் சடோல் (22) என்பது தெரிய வந்தது.
இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
கோவையில் இருந்து வளைகுடா நாடான சார்ஜாவுக்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று அதிகாலை 3 மணிக்கு சார்ஜாவுக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது.
பயணிகள் விமானத்தில் ஏற காத்து இருந்தனர். விமானம் ஏற வந்த வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் ஒரு பையில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது அவர் சூடான் நாட்டை சேர்ந்த முகம்மது தாரிக் சாலிக் சடோல் (22) என்பது தெரிய வந்தது.
இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews