செய்திகள்

பூட்டி கிடக்கும் அரசு மருத்துவமனையை திறக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

Published On 2018-05-17 17:22 GMT   |   Update On 2018-05-17 17:22 GMT
கீழையூரில் பூட்டி கிடக்கும் அரசு மருத்துவமனையை உடனே திறக்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூரில் பூட்டி கிடக்கும் அரசு மருத்துவமனையை உடனே திறக்க வலியுறுத்தியும், கீழையூர் ஊராட்சியில் உடனே 100 நாள் வேலையை தொடங்க கோரியும் கீழையூர் கடைத்தெரு நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், மாதர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் மல்கோத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பக்கிரிசாமி, ராஜேந்திரன், பன்னீர்செல்வம், தவமணி, செல்வராஜ், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிமணி, கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News