செய்திகள்

செல்லூரில் தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொல்ல முயற்சி: வாலிபர் மீது புகார்

Published On 2018-05-17 13:59 GMT   |   Update On 2018-05-17 13:59 GMT
குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயன்றதாக வாலிபர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

மதுரை:

செல்லூர் மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

நேற்றும் விஜயகுமார் மது குடித்து வர, கார்த்திகா குழந்தைகளுடன் அறையில் சென்று படுத்து விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவில் அவரது தலையில் கல்லைப்போட்டு தாக்கி விட்டு விஜயகுமார் தப்பி ஓடிவிட்டார்.

பலத்த காயம் அடைந்த கார்த்திகா சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News