செய்திகள்

சிதம்பரத்தில் கல்லூரி மாணவி கடத்தல்- போலீசில் தந்தை புகார்

Published On 2018-05-16 10:26 GMT   |   Update On 2018-05-16 10:26 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கல்லூரி மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது அப்பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நந்தினி(வயது 18). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை நந்தினி கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து நந்தினியின் தந்தை சண்முகம் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் நந்தினியை சிதம்பரம் அம்பலவாணன் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது தந்தை சங்கர், தாய் வள்ளி ஆகிய 3 பேரும் கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News