செய்திகள்

திருப்பத்தூரில் ஸ்டேசனரி கடை உரிமையாளர் தற்கொலை

Published On 2018-05-15 12:27 IST   |   Update On 2018-05-15 12:27:00 IST
திருப்பத்தூரில் மது குடித்து வந்ததை மனைவி கண்டித்ததால் ஸ்டேசனரி கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 46). இவர் அதே பகுதியில் ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஆர்த்தி (18), லட்சுமி (17) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

சுப்பிரமணியன் அடிக்கடி மது அருந்தியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்றும் சுப்பிரமணியன் மது குடித்து வந்ததால் கலைச்செல்வி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது

இதையடுத்து கலைச்செல்வி தனது மகள்கள், மகனுடன் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு தூங்கச்சென்றார்.

அதன் பிறகு மன வேதனையில் இருந்த சுப்பிரமணியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நள்ளிரவு நேரத்தில் அவரது மகள் வந்து பார்த்த போது தந்தை தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News