செய்திகள்

வேதாரண்யத்தில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு - மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2018-05-14 10:35 IST   |   Update On 2018-05-14 10:35:00 IST
வேதாரண்யம் கடற்கரையில் அமைக்க இருக்கும் உரக்கிடங்கிற்கு எதிராக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் ரூ.3 கோடியே 44 லட்சம் செலவில் உரக்கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான விழா சமீபத்தில் நடந்தது. இங்கு உரக்கிடங்கு அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வேதாரண்யம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்பணி தொடர்ந்து நடந்ததால் உரக்கிடங்கு அமைக்கும் திட்டத்தை நிறுத்த உடனே கோரி வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பைபர் படகில் சென்று மீன் பிடித்து வந்தனர். இதனால் மீன்களே கிடைத்து வந்தது. இந்த நிலையில் இன்று பைபர் படகில் சென்றும் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உரக்கிடங்கு திட்டத்தை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News