செய்திகள்

பெண்கள் பற்றி பேசுவது இழிவான செயல்- வைகோ பேட்டி

Published On 2018-04-21 01:35 GMT   |   Update On 2018-04-21 01:35 GMT
பெண்கள் பற்றி எஸ்.வி.சேகர் கூறிய கருத்து அதிர்ச்சியாக உள்ளது. பெண்கள் பற்றி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று வைகோ கூறினார். #vaiko #svsekar
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பெண்களை தாயாக, தெய்வமாக போற்றும் மரபுதான் உள்ளது. பத்திரிகை துறையில் உள்ள சகோதரிகள் பண்பு உள்ளவர்கள். நாகரிகத்துடன் நடந்து கொள்வார்கள்.

எஸ்.வி.சேகர் கருத்து அதிர்ச்சியாக உள்ளது. கவர்னர் நடந்துகொண்ட செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பெண்கள் பற்றி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இழிவான செயலாகும். நியூட்ரினோ திட்டத்தை 8 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறேன். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மோடி அரசும், அமெரிக்காவும் துடிதுடிக்கிறது. குஜராத், மும்பையில் இந்த திட்டத்தை தொடங்க வேண்டியது தானே. எத்தனை விஞ்ஞானிகள் சொன்னாலும் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #vaiko #svsekar
Tags:    

Similar News