செய்திகள்

ஈரோட்டில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

Published On 2018-04-18 11:44 GMT   |   Update On 2018-04-18 11:44 GMT
ஈரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 6 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு தெப்பக்குள வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 72).

இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்தனர்.

அவர்கள் 2 பேரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். திடீரென அவர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர்.

அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி திருடன்... திருடன்... என்று சத்தமிட்டார். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த பகுதியில் சரஸ்வதியின் சத்தம் கேட்டு யாரும் உடனே வரவில்லை.

இதனால் யாரிடமும் பிடிபடாமல் அந்த மர்ம நபர்கள் நகையுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News