செய்திகள்
சேலையூர் அருகே பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்தி நகை பறித்த வாலிபர்
சேலையூர் அருகே பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்தி நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி, இவரது மனைவி பார்வதி. கட்டிட தொழிலாளி. இவர் மேடவாக்கம் கூட்டு சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பார்வதியிடம் பேச்சு கொடுத்தார். வீடு கட்டுமான பணியில் வேலை இருக்கிறது. உடன் வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை நம்பிய பார்வதி அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மாம்பாக்கம் மெயின் ரோடு வேங்கைவாசல் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கினார்.
திடீரென பார்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த பார்வதி இதுபற்றி சேலையூர் போலீசில் புகார் செய்தார். நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.