செய்திகள்
சேலையூர் அருகே மொபட் மீது வேன் மோதல் - பெண் பலி
சேலையூர் அருகே மொபட் மீது வேன் மோதலில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சேலையூர் அருகே காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகலாதன் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேமா, மகன் அதிரூபன் (8). பிரேமா மகன் அதிரூபனுடன் மொபட்டில் கடைக்கு சென்றார். காமராஜபுரம் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது டெம்போ வேன் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
பிரேமா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சிறுவன் அதிரூபன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். இதுகுறித்து குரோம்பேட்டை போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் கார்த்திக்கை கைது செய்தனர்.