செய்திகள்

புதுக்கோட்டை, கரூர் மாவட்டத்தில் மழை - குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2018-03-17 10:16 IST   |   Update On 2018-03-17 10:16:00 IST
புதுக்கோட்டை, கரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இன்று அதிகாலை மாவட்டத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் ஒரு மணிநேரம் வரை மழை பெய்தது. இதே போல் அறந்தாங்கியிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.கரூர் நகரில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

மாயனூர்-15, பால விடுதி-18.03, பஞ்சப் பட்டி-10.3, கிருஷ்ணராயபுரம்-10, அரவக்குறிச்சி-0.8.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. #tamilnews

Similar News