செய்திகள்

அரியலூரில் அரசு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2018-03-08 21:40 IST   |   Update On 2018-03-08 21:40:00 IST
பிறப்பு சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்த அரசு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முத்து முகமது. இவர் பிறப்பு- இறப்பு சான்றிதழ் வழங்கும் பணியையும் செய்து வந்தார். அரியலூர் மேலத் தெருவை சேர்ந்தவர் ராசுகுட்டி (வயது 25) தொழிலாளி. இவர் தனது மகளுக்கு பிறப்பு சான்றிதளுக்கான மனு தாக்கல் செய்தார். ஆனால் கடந்த 3 மாதமாக சான்றிதழ் வழங்கப்பட வில்லை. 

இந்நிலையில் நேற்று ராசு குட்டி பிறப்பு சான்றிதழ் வாங்க அரியலூர்  நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது முத்து முகமது சான்றிதழ் வாங்க நாளை வரும்படி ராசுகுட்டியிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராசு குட்டி அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியால் முத்து முகமதுவை தாக்கினர். பின்னர் முத்து முகமதுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவரை பணி செய்ய விடாமல் தடுத்தார். 

இது குறித்து முத்து முகமது அரியலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் வழக்குபதிவு செய்து ராசுகுட்டியை கைது செய்தார். #tamilnews

Similar News