செய்திகள்

அரியலூர் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி படித்த மாணவன் மாயம்

Published On 2018-03-06 14:51 IST   |   Update On 2018-03-06 14:51:00 IST
அரியலூர் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி படித்த மாணவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவரது மகன் மருதுபாண்டி (15), அரியலூர் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி, 10-ம் வகுப்பு பயின்று வந்தான்.

மாணவன் மருதுபாண்டி தினமும் விடுதி வார்டனின் செல்போனை வாங்கி பெற்றோருடன் பேசுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முதல் மாணவனிடம் இருந்து எந்த அழைப்பும் பெற்றோருக்கு வரவில்லை. இதனால் அவர்கள் அரியலூரில் உள்ள அரசு விடுதிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது 2-ந் தேதி இரவு 8 மணிக்கு வெளியே சென்ற மாணவன் இதுவரை திரும்பவில்லை என விடுதி காப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவனின் பெற்றோர் அரியலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மாணவன் மருது பாண்டியை தேடி வருகின்றனர்.

மேலும் பள்ளி, விடுதியில் உடன் இருந்த மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

Similar News