செய்திகள்
சுற்றுலா தலங்களில் பாலித்தீன் பைகள் பயன்படுத்த தடை
அரியலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்று நினைவு சின்னம் மற்றும் சுற்றுலா தலங்களில் பாலித்தீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசால் வரலாற்று நினைவுசின்னங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் 300 மீட்டர் தூரத்திற்குள் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்று நினைவு சின்னம் மற்றும் சுற்றுலா தலங்களில் 300 மீட்டர் தூரத்திற்குள் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். #tamilnews