செய்திகள்

செந்துறை அரசு ஆஸ்பத்திரியில் நர்சுக்கு மிரட்டல்- போலி நிருபருக்கு வலைவீச்சு

Published On 2018-02-22 19:10 IST   |   Update On 2018-02-22 19:10:00 IST
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனையில் நர்சுக்கு மிரட்டல் விடுத்த போலி நிருபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிபவர் சுலோச்சனா (வயது 38). இவர் நேற்றிரவு பணியில் இருந்த போது மணப்பத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான சுரேஷ்(35) , அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பால்சாமி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க வந்தனர்.

அப்போது மருத்துவமனையில் மின்விசிறி இயங்காதது குறித்து சுலோச்சனாவிடம், சுரேஷ் தகராறு செய்தாராம். மேலும் தான் நிருபர் எனக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இது குறித்து தகவலறிந்து செந்துறை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அதற்குள் சுரேஷ் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து செவிலியர் சுலோச்சனா அளித்த புகாரின் பேரில் போலீசார் சுரேசை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் விசாரணையில் சுரேஷ், போலி நிருபர் எனவும் தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில்  போலி நிருபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசு அதிகாரிகள் -மருத்துவமனை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews

Similar News