செய்திகள்

அரியலூரில் திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம்- கி.வீரமணி பங்கேற்பு

Published On 2018-02-21 22:35 IST   |   Update On 2018-02-21 22:35:00 IST
அரியலூரில் நடை பெற்ற திராவிடகழக கலந்துரையாடல் கூட்டத்தில் திக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அரியலூர்:

அரியலூர் ஜி.ஆர் திருமண மண்டபத்தில் திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் துரைசந்திரசேகர், ஓய்வு பெற்ற பேராசிரியர் தங்கவேல்,மண்டல தலைவர் காமராஜ், மண்டல செயலாளர் மணி வண்ணன், மாவட்ட தலைவர் சிந்தனைச் செல்வன், மாவட்ட செயலாளர் விடுதலை நீலமேகம், ஒன்றிய செயலாளர் கோபால், நகர தலைவர் கோவி ந்தராஜ், சிவக் கொழுந்து, செல்லமுத்து, செந்துறை சிவமூர்த்தி, அரியலூர் டாக்டர் வசந்தா மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை மோடி துவங்கி வைப்பது அவசியமல்ல, காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்யது மிக முக்கியம், வரும் 22-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது வரவேற்கதக்கதாகும். 

கூட்டத்தில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள் காழ்ப்புனர்ச்சிகளை விட்டு காவிரி நதிநீர் பிரச்சனையில் நல்ல தீர்வு கான முன்வர வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் நானும் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். #tamilnews

Similar News