அரியலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. கொடிநாள் விழா
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தே.மு.தி.க. கொடி நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.
முன்னதாக மாவட்ட தலைமைக்கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் கழக தொண்டரணி துணைச் செயலாளர் சாகுல்அமீது தே.மு.தி.க. கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனையடுத்து அரியலூர் 7,8-வது வார்டுகளிலும், அரியலூர் ஒன்றியம் காஞ்சி லிகொட்டாய், திருமானூர் ஒன்றியம் கோமான், குருவாடி, காமரசவல்லி, மாத்தூர், கீழவரப்பங்குறிச்சி, மாதா காலனி, ஏலாக்குறிச்சி, கீழ கொளத்தூர், சாத்தமங்கலம், முடிகொண்டான், திருமா னூர், குலமாணிக்கம், செம்பியக்குடி, கோவில் எசனை, ஆங்கியனூர்,
வெங்கனூர், வேட்டக்குடி, எரக்குடி, அயன்சுத்தமல்லி, மடத்தான்குளம், மேலப்பழூர், மல்லூர் ஆகிய ஊர்களில் கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைதலைவர் ஜோசப் சத்ய மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் தங்க ஜெயபாலன், அரியலூர் நகர செயலாளர் தாமஸ்ஏசுதாஸ், ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் மணிகண்டன்,
திருமானூர் கிழக்கு ராஜ்குமார், மேற்கு ஜெகதீசன், அரியலூர் ஒன்றிய பொருளா ளர் சசிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, கலிய மூர்த்தி, அரியலூர் மாவட்ட அணிச் செயலாளர்கள் நல்ல தம்பி, ராமச்சந்திரன், சகாதேவன், முன்னாள் மாவட்ட மாணவரணி தர்மராஜ், சதீஸ்குமார்,
அரியலூர் நகர நிர்வாகிகள் மதி, சேகர், சுந்தர், ராஜா, கண்ணன், சின்னமுருகன், மருது, சக்தி, திருமானூர் ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், ரெங்கராஜ், சாமிநாதன், விஜயலாரன்ஸ், பிரான்சிஸ் பாலகுமார், முத்துலிங்கம், பழனியப்பா, தெய்வநாதன், கருப்பையா, செந்தில்குமார் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். #tamilnews