செய்திகள்

மயிலாடுதுறையில் அம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு

Published On 2018-02-08 19:23 IST   |   Update On 2018-02-08 19:23:00 IST
மயிலாடுதுறையில் மாகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை 2-வது புதுத் தெருவில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உண்டியல் திறக்கப்பட்டு 2 மாதங்களான நிலையில் உண்டியலில் காணிக்கை பணம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் உண்டியல் மஞ்சள் துணியை போட்டு மூடி வைத்திருப்பதை பார்த்தார். அவர் துணியை அகற்றி விட்டு பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி அவர் கோவில் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். அதில் உண்டியலை உடைத்து கொள்ளையன் ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

இது பற்றி போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். #tamilnews

Similar News