செய்திகள்
நாகையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர்:
நாகை அந்தணப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் மோனிசா (வயது 22). பி.எட்.பட்டதாரி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றிய புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.