செய்திகள்

விருத்தாசலத்தில் வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2018-01-30 22:28 IST   |   Update On 2018-01-30 22:28:00 IST
விருத்தாசலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர்:

விருத்தாசலம்- கருவேப்பிலங்குறிச்சி ரோட்டில் உள்ள ஆலயம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் சந்தேகமான முறையில் வந்தனர். அவர்களை போலீசார் வழிமறித்து விசாரித்த போது, அவர்கள் அரியலூர் மாவட்டம் செந்துறை நக்கம்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்த பாஸ்கரன் (32), சிதம்பரம் கீழ்பூங்குடி ராஜசேகரன் (32), திருநெல்வேலி மாவட்டம் காக்கநல்லூரை சேர்ந்த கோபால் என்கிற திருமலை (37) ஆகிய 3 பேர் என்று தெரிந்தது.

மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து விருத்தாசலம் அருகே செல்வி என்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இது தவிர 3 பேரும் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதில் பாஸ்கரன் மீது மட்டும் 8 வழக்குகள் உள்ளன. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

அதன்படி பாஸ்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பாஸ்கரனை குண்டர் சட்டத்தில் விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர். #tamilnews

Similar News