செய்திகள்

நாகை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-01-29 17:50 IST   |   Update On 2018-01-29 17:50:00 IST
நாகை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் வேலுமணி, விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை:

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த ஒக்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது35). கொத்தனார். இவருடைய மனைவி சுமதி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனையடைந்த சுமதி யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் நாகை உதவி கலெக்டர் வேலுமணி, விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

Similar News