செய்திகள்

புதுக்கோட்டையில் விபத்துக்களில் ஆண்டுக்கு 320 பேர் இறக்கிறார்கள்

Published On 2017-12-22 21:48 IST   |   Update On 2017-12-22 21:48:00 IST
சாலைவிதிகளை கடைபிடிக்காமல் புதுக்கோட்டையில் விபத்துக்களில் ஆண்டுக்கு 320 பேர் இறந்துள்ளதாக கருத்தரங்கில் கலெக்டர் கணேஷ் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,டிச.22-

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு குறித்த கருத்த ரங்கம் மாவட்ட கலெக் டர் கணேஷ் தலைமை யில் நடைபெற்றது.கருத்தரங்கில் கலெக்டர் பேசியதாவது:

இந்தியாவில் வருங்கால சிறந்த குடிமகன்களை உருவாக்குவது ஆசிரியர்கள் ஆவர். எனவே சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வருங்கால ஆசிரியர்களாகிய கல்வியியல் கல்லூரி மாணவர் களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கருத்தரங்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்படும் பல்வேறு சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணம் அடிப்படை சாலை விதிகள் குறித்த விழிப்பு ணர்வு இல்லாததே ஆகும்.

புதுக்கோட்டை மாவட்ட த்தில் வருடத்திற்கு சராசரி யாக சுமார் 320 நபர்கள் சாலை விபத்து களினால் இறக்கிறார் கள். தமிழக த்தில் ஆண்டிற்கு சராசரி யாக 16,500 நபர்கள் சாலை விபத்துகளால் இறக்கி றார்கள். சாலை விபத்து களில் வாகன பழுது காரணமாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவே விபத்து ஏற்படுகிறது.இவ்வாறு ஏற்படும் விபத்துகளிலும் உயிரிழப்பு மிகக் குறைவு. மீதமுள்ள விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு கவனமின்மை, அலட்சியம், சாலை விதிகளை மதிக்கா மல் இருத்தல் போன்ற காரணங்க ளினால் ஏற்படு கிறது. இருசக்கர வாகனங் களினால் அதிக விபத்து ஏற்படு கிறது.

முக்கிய சாலைகளில் வாகன ங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும். துணை சாலையில் இருந்து முக்கிய சாலைக்கு செல்லும் பொழுது வாகனத்தின் வேகத்தினை 0 வேகத்திற்கு கொண்டு வந்து வாகனத்தை நிறுத்தி சாலையின் இரு புறமும் பார்த்து செல்ல வேண்டும்.இத்தகைய விபத்து களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 150 நபர்கள் இறந்துள்ளனர். வேகத்தடை, சிக்கனல் உள்ளிட்ட சாலை விதிகளை மதிக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் விபத்து தமக்கு ஏற்படாது என்ற எண்ணத்தை தவிர்த்து, சாலை விதிகளை கடைப் பிடிக்காமல் கவனமின்மை யாக இருந்தால் தமக்கும் விபத்து ஏற்படும் என்பதை உணரவேண்டும். இத்தகைய விழிப்புணர்வின் மூலம் விபத்தை தடுக்கலாம். எனவே பொது மக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Similar News