செய்திகள்

அறந்தாங்கியில் வாலிபர் தற்கொலை

Published On 2017-12-22 17:29 IST   |   Update On 2017-12-22 17:29:00 IST
அறந்தாங்கியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி:

அறந்தாங்கி களப்பக்காடு சிலோன் காலணியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது24). கூலி தொழிலாளி. இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் அவர் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனிமையில் குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த மாரியப்பன், கடந்த 20-ந் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News