செய்திகள்
கீரனூர் அருகே லாரி மோதி முதியவர் பலி
கீரனூர் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த புலியூர் சவேரியார் புரத்தை சேர்ந்தவர் நாயகம் (வயது64) இவர் தனது சைக்கிளில் புலியூர் பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிகொண்டு வந்த லாரி நேருக்கு நேராக மோதியது. இதில் நாயகம் சம்பவ இடத்தில் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுகை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.